Pages

Thursday, April 2, 2015

இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.

01.04.2015 தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், RMSA இயக்குநர் முனைவர் க. அறிவொளி, தேர்வுத்துறை இயக்குநர் திரு. கு. தேவராஜன், SCRT இயக்குநர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் திருமதி. தன். வசுந்தராதேவி ஆகியோரை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை அவர்கள் சந்தித்தார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ஐம்பெரும் விழாவில் 1000 பக்கங்கள் கொண்ட அரசாணைகள் தொகுப்பு வெளியிடுவது பற்றி இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். இந்த முயற்சியை வரவேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக் கடிதங்களை அனைத்து இயக்குநர்களும் வழங்கினார்கள்.
இந்த சந்திப்பின் போது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தம்பு. இராமதாஸ் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.