மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ’டாப் சீட்’ முறை நடப்பாண்டிலும் பின்பற்றப்படுகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இந்த சீட்டின் ’பி’ பகுதியில், மதிப்பெண் பதிவு செய்யப்படுகிறது.
இம்மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் ’சர்வரில்’ பதிவேற்றப்படுகின்றன. கடந்தாண்டு வரை, சம்பந்தப்பட்ட மையங்களிலேயே மதிப்பெண்கள் சரி பார்க்கப்பட்டன. நடப்பாண்டு முதல், மொழிப்பாடங்களை தவிர, மற்ற பாட மதிப்பெண்கள், மாநில அளவில் மறுபரிசோதனை செய்யும் வகையில், சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ’விடைத்தாள் முகப்புசீட்டு ’பி’ பிரிவில், மதிப்பெண் பதிவு செய்யப்படும். விடைத்தாள் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்களை ஒப்பிட்டு சரிபார்க்க, அப்பகுதியிலுள்ள ’பார்கோடு’ பயன்படுத்தப்படுகிறது. மாநில அளவில் சரிபார்க்கவே சென்னைக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.