Pages

Wednesday, March 25, 2015

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு


பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 


தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
பார்வையற்றோரை குறிப்பிட்ட காலிப்பணியிடங்களில் நியமிக்க முடியாது என அரசு பதில் அளித்துள்ளது. 

பார்வையற்றோரையும் சாதாரண மனிதர்களாக பார்க்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பார்வையற்றோரை நியமிக்காதது ஏன்? இது குறித்து சபீதா விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி சபீதா நேரில் ஆஜராகவும் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.