"மாணவர்களின் ஒழுக்கம் தான், அவர்களை, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்" என, கல்லுாரி ஆண்டு விழாவில், டி.எஸ்.பி., பேசினார். திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. இதில், திருத்தணி டி.எஸ்.பி., பொற்செழியன் பேசுகையில், &'&'தமிழகத்தில் உள்ள 69 அரசினர் கலைக் கல்லுாரிகளில், திருத்தணி கல்லுாரி மாணவர்கள், விளையாட்டு துறையில் சிறந்து விளக்குகின்றனர்.
இவர்கள், பிற மாநிலங்களுக்கு சென்றும், விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கின்றனர். ஒழுக்கத்தை கடைபிடிக்கும் மாணவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த நிலை, பதவிகள் அடைவர். தொடக்கப் பள்ளி ஆசிரியர் முதல், கல்லுாரி பேராசிரியர்கள் வரை, மாணவர்கள் மதிக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் மனிதனை உயர்த்தும்&'&' என்றார்.
விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.