அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில் முரண்பாடு எழுந்துள்ளதால், தமிழக அரசு அரசாணை வழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால், அவரின் தனி செயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.