Pages

Friday, March 27, 2015

மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழக மருத்துவ பணிகள் துறையின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவில், உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு 82 காலியிடங்கள் உள்ளன.

சித்தா 63; ஆயுர்வேதா எட்டு; யுனானி மூன்று; ஹோமியோபதி ஒன்பது காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, நேரடித் தேர்வு நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு, இரண்டு தாள்களாக, மே 31ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கிறது.

தகுதியானோர், தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 24ம் தேதி வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

இத்தேர்வை எழுதுவதற்கான தகுதி, காலியிடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு றிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.