Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 6, 2015

    பிளஸ் 2 தேர்வு தொடங்கியது: தமிழ் முதல்தாள் எளிமை தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.

    தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களின் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், தமிழ் முதல் தாளில் காப்பியடித்ததாக 5 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர். சென்னை, கடலூர் மாவட்டங்களில் தலா 2 பேரும், மதுரையில் ஒருவரும் பிடிபட்டனர்.

    பிளஸ் 2 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், தனித்தேர்வர்களாக 42 ஆயிரம் பேரும் தேர்வு எழுதினர். கிராமப் பகுதிகளில் இருந்த தேர்வு மையங்களுக்குக்கூட தேர்வு நடைபெற்ற மூன்று மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
    விடைத்தாள் மையங்கள்: வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களிலிருந்து வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல், தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக விடைத்தாள் மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.
    இந்த மையங்களில் விடைத்தாள்கள் சில நாள்கள் வைக்கப்பட்டு, அதன்பிறகு, விடைத்தாள் மதிப்பீட்டுக்காக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நன்கு திட்டமிடப்பட்டிருந்ததால், எந்தவிதப் புகார்களுக்கும் இடமின்றி முதல்நாள் தேர்வுகள் நடைபெற்றதாக மாவட்டங்களில் தேர்வுகளை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னையில்... சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 109 தேர்வு மையங்களில் 47 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் 47 ஆயிரம் பேரும் தேர்வு எழுதினர். திருவள்ளூரில் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், காஞ்சிபுரத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் தேர்வுப் பணிகளைக் கண்காணித்தனர்.

    No comments: