Pages

Sunday, February 15, 2015

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை 4 மாதங்களுக்குள் களைந்து உரிய முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட 3 நபர் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி சசிதரன், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், 3 நபர் கமிட்டியின் பரிந்துரைகளையும் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.