Pages

Thursday, February 26, 2015

அடிப்படை வசதிகள் இருந்தும் மாநகராட்சி பள்ளிகளில் குறையுது மாணவர் சேர்க்கை: தேவை ஆங்கிலத்தில் சிறப்புக் கவனம்!!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருந்தும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்க மாநகராட்சி போதிய கவனம் செலுத்தாமல் சுணக்கம் காட்டி வருகிறது. ஆங்கிலம் கற்பிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி, தனியார் பள்ளிகளைப் போல பஸ், வேன் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 63 பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு உத்தரவுப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பணி யில் உள்ளனர். இருந்தாலும் மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. இத னால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளில் மற்ற தனியார் பள்ளிகளை காட்டிலும் சிறப்பாக உள்ளது. துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளியில் உள்ள கழிவறைகள் தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகின்றன.
ஆர்ஓ பிளான்ட் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் சில பிளான்ட்கள் இயங்காமல் உள்ளன. அவற்றை மீண்டும் இயக்கத்தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி கல்வித்துறை எடுத்து வருகிறது. தனியார் பள்ளிகளை போல மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மாணவிகளுக்கு இலவச நாப்கீன்கள் வழங்கப்படுகின்றன. இது போன்ற திட்டங்களை தனியார் பள்ளிகளில் காண முடியது என மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு வசதிகள் கிடைப்பதுடன், கட்டணமும் குறைவு. இருந்தாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில், தனியார் பள்ளிகள் பஸ், வேன்களை மாணவர்களின் வீட்டு வாசலில் நிறுத்தி பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர். எனவே, இது போன்று மாநகராட்சி பள்ளிகளிலும் வாகன வசதி ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலம் கற்பித்தலில் சிறப்புக் கவனம் செலுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோரின் கவ னத்தை மாநகராட்சி பள்ளி கள் பக்கம் திரும்பச்செய்ய வேண்டும். இனியும் மாண வர் சேர்க்கை குறைவதை தடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டக்கூடாது என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.