Pages

Thursday, February 26, 2015

மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்

மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வரும் மே மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப, மொபைல் போன் எண்களை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது.

ஆனால், அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலை தொடர்பு எல்லை அல்லது குறிப்பிட்ட மாநிலங்களில்மட்டுமே, இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தற்போது பெற முடிகிறது. 


இதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முன்வந்துள்ளது. இதன்படி, நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், மொபைல் போன் எண்ணை மாற்றாமல், சேவை வழங்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். வரும் மே 3 முதல், நாடு முழுவதும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது; இதற்காக, டிராய் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.