அனைவருக்கும் கல்வி இயக்க திருப்புல்லாணி வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பத்மாவதியிடம் ஆசிரியர்கள் நேற்று மாலை முறையிட்டனர். உரிய பதிலளிக்காததால், வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கூடுதல் சி.இ.ஓ., பத்மாவதி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.