ஸ்ரீ மதுரை அரசு பள்ளியில், பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடலூர் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், முப்பெறும் விழா நடந்தது. ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் ரவிகுமார் வாசித்தார். தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற சரிதா, சிந்து, ஜஸ்டீன் ஆகியோருக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் முன்று இடங்களை பெற்ற ஜித்து, மகேஷ், தெஸ்னியா ஆகியோருக்கு முறையே, 5000 ரூபாய், 4000 ரூபாய், 3500 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இலக்கிய மன்றம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், இலக்கிய மன்ற செயலர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.