உங்கள் குழந்தை ஆங்கிலம் பேசுகிறது என, பெருமைப்பட வேண்டாம். ஆங்கில வழி கல்வி பயிலும் குழந்தை கள் எதிர்காலத்தில், உங்களை நடுத்தெருவில் விட்டுச் சென்று விடுவர் அல்லது முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு விடுவர்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. கல்வி பயிற்றுவிக்கும் பணியை, 'வித்யா பாரதி அகில பாரதிய சிக் ஷா சன்ஸ்தான்' என்ற அமைப்பு கவனிக்கிறது. நம் நாட்டில் பழம் காலத்தில் பின்பற்றப்பட்ட குருகுல கல்வி முறையை பிரபலப்படுத்த வேண்டும் என்பதே, இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாதிரி குருகுலப் பள்ளியை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்ற கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில், வித்யாபாரதி அமைப்பின் தலைவர் ராமேந்திர ராய் பேசியதாவது: ஒரு சில மத அமைப்பு கள், நாடு முழுவதும் கான்வென்ட் பள்ளிகளை அமைத்து கல்வி பயிற்றுவிக்கின்றன. இந்த பள்ளிகளில், ஆங்கிலத்துக்கும், வெளிநாட்டு கலாசாரத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை கண்டு கொள்வது இல்லை. பெற்றோரும், ஆங்கில மோகத்துக்கு அடிமையாகி, தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்கின்றனர். தங்கள் குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து, பெற்றோர் இப்போது பெருமைப்படலாம். ஆனால், ஆங்கில வழி கல்வி பயிலும் குழந்தைகள், எதிர்காலத்தில், பெரியவர்களானதும், தங்கள் பெற்றோரை நடுத்தெருவில் விட்டு விட்டு சென்று விடுவர் அல்லது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சென்று விடுவர். நம் நாட்டு கலாசாரத்தையும், கூட்டு குடும்ப வாழ்க்கை முறையையும், அவர்களுக்கு கற்றுத் தராததே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆபத்தான போக்கை தடுக்கும் வகையில் தான், நம் நாட்டு கலாசாரத்தை போதிக்கும் மாதிரி பள்ளி களை நாடு முழுவதும் அமைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளோம். வரும், 2017க்குள், ஒவ்வொரு தாலுகாவிலும் இந்த பள்ளிகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். எங்களுக்கு பெற்றோர் ஆதரவு தேவை. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment