Pages

Friday, January 30, 2015

“10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு


தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு நடைபெற உள்ளடி என்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத்துறை அதிகாரி, தொழிலாளர் நலத்துறை அதிகாரி, வேளாண் துறை துணை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பபடும் என்றும் அவர் தெரிவித்தார். 2014 - 15 ஆம் ஆண்டில் 14ஆயிரத்து 252 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பால சுப்பிரமணியன் கூறினார்.

குரூப் - 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர் கடந்தாண்டு தேர்வு முறையே இந்தாண்டும் பின்பற்றப்படும் என்றார். உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதல்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் பின்பற்றப்படுவதாகவும் பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.