Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 31, 2014

    அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014க்கான நாட்காட்டி

    05/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
    12/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
    14/04/2014 - திங்கட்கிழமை - தமிழ் புத்தாண்டு விடுமுறை
    17/04/2014 - வியாழக்கிழமை - பெரிய வியாழன் - வரையறுக்கப்பட்ட விடுமுறை

    வான்வெளியை வசமாக்கிட

    வானம் எப்பொழுதும் உயர்ந்ததாகவும், அதிசயங்கள் நிறைந்ததாகவும் காலம் காலமாக நம் மனதில் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் அந்த வான்வெளியின் மேல் பற்று கொண்டு அதனை ஆராய்ந்து விடைகளைக் கண்டுணர்ந்தவர்கள் ஒரு சிலரே.

    மேலும் அவர்களுக்கான அங்கீகாரம் எளிதாக கிடைத்துவிடவில்லை. கடும் எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களின் ஆராய்ச்சிகளை உலகுக்கு வெளிப்படுத்தினர்.

    மாணவரை தாக்கிய ஆசிரியை மீது புகார்

    சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.

    மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்

    மடிக்கணினியை பிரித்துப் பொருத்திய கோவை தனியார் பள்ளி 4ம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், "வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை.," டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.

    3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

    தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 16ல் பள்ளி திறப்பு

    எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கிய நிலையில், தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"

    ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது. தாலுகா அளவில் அவை பிரித்து வழங்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம், புதிய வாக்காளர் சேர்க்காமல், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 418 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கும், 5 பேர் வீதம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    உண்டு உறைவிட பள்ளி மூடல்: மலை கிராம மாணவர்கள் அவதி

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    சங்க நடவடிக்கையில் அதிருப்தி கூட்டணி மாறிய ஆசிரியர்கள்

    தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்ததால், ஆசிரியர்கள் சங்கம் விட்டு சங்கம் தாவினர். இதையடுத்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியில், 100 ஆசிரியர்கள் புதிதாக இணைந்தனர். பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில், தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த விவகாரத்தில், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.

    தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி

    05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம்
    12.04.2014~பள்ளி வேலை நாள்
    14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை
    17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன்
    18.04.2014~புனித வெள்ளி விடுமுறை
    19.04.2014~சனி விடுமுறை

    10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

    மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது, அதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும்.

    தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

    மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

    மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை

    மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் 40 அஞ்சலகங்களில் சி.பி.எஸ்., திட்டம் அறிமுகம்

    நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களில் வரும், 2016ம் ஆண்டுக்குள், "கோர் பேங்கிங் சிஸ்டம் - சி.பி.எஸ்., வசதி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 40 அஞ்சலகங்களில், இவ்வசதி செய்யப்பட்டுள்ளன. அஞ்சல்துறையில், "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த, "எங்கேயும், எப்போதும்' என்ற தலைப்பில், மத்திய அரசு, 700 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் துவங்கி, மாநிலம் முழுவதும், 40 அஞ்சலகங்களில், சி.பி.எஸ்., திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்

    லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான முக்கிய வழக்குகள்

    GROUPING MATTERS 
    ~~~~~~~~~~~~~~~~ 
    1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES 
    ~~~~~~~~~~~~~~~~ 
    2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014 

    தஞ்சை பல்கலையில் தொலைநிலை கல்வி தேர்வு அறிவிப்பு

    தஞ்சை தமிழ் பல்கலையின், தொலைநிலை தேர்வுகள், மே மாதம், 21 முதல், 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித்தேர்வு, மே மாதம், 21

    Sunday, March 30, 2014

    வரலாறு முதுகலை பாட ஆசிரியர் (வெவ்வேறு பாட ஆசிரியர்) பதவி உயர்வு வழங்கும் போது தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்ப்பட்டு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

    இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

    ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

    தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஆணை மாதிரி வாக்குசாவடியில் சிறப்பு பயிற்சி

    தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஆணையில் ஒரு ‘யூனிக்’ எண் வழங்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வணிகவியல் விடைத்தாள்களை தொழிற்பாட பிரிவுகளை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தும்படி மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.

    தொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    "தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது.

    வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 15 ஆயிரம் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு வருகிற 3ம் தேதி நடைபெறவுள்ளது

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்களிலும் வரும் 3ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை

    மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளார்  என தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    எஸ்.எம்.எஸ்.,சில் ஓட்டுச்சாவடி விவரம் : ஒரு லட்சம் பேர் பயன் பெற்றனர்

    தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய, எஸ்.எம்.எஸ்., திட்டம் மூலம், ஒரு லட்சம் வாக்காளர்கள், தாங்கள் ஓட்டு போடும், ஓட்டுச்சாவடி விவரங்களை அறிந்து கொண்டனர்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 13 லட்சம் பேர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு

    5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்"

    எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது.

    அரசு பள்ளிகளில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி, முக்கியத்துவம் தர உத்தரவு

    தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது.

    ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு

    தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தனியார் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்த்த பரிந்துரை; அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்

    தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாகப் பதிவுசெய்து வருபவருக்கு இழப்பீடு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு செய்து வந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத முதியவருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்த ஏ.ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    Saturday, March 29, 2014

    ரேசன் கடைகளில் முறைகேடா? பறக்கும் படைக்கு "டயல்" பண்ணுங்க


    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

    75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியரை கண்டித்து பள்ளி வாயில் கேட்டை பூட்டி கிராம மக்கள் போராட்டம்

    சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தகநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தினமும் காலையில் ஒரு ஆசிரியர் முன்னதாகவே பள்ளிக்கு வந்து பள்ளி வாயிலை திறக்க வேண்டும். நேற்று வர வேண்டிய ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் மாணவர்கள் வெளியில் நின்றிருந்தனர்.

    பெண் தேர்தல் அலுவலர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப போக்குவரத்து வசதி வேண்டும்

    பெண் தேர்தல் அலுவலர்கள் தக்க பாதுகாப்புடன் வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜேஷிடம் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

    சிறப்பு ஊதியத்துடன் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்

    ஓட்டுப்பதிவு அன்று வாக்குசாவடிகளை வெப் காமிரா மூலம் பதிவு செய்யும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர். இந்த வெப் காமிரா இயக்குதல், கண்காணிப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வரும் 31ம் தேதி தேர்தல் பயிற்சி

    "நாமக்கல் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, 1,475 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் பயிற்சி நடக்கிறது' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10 முதல் 19 வரை நடைபெறவுள்ளது

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.

    அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம் குறைக்கப்படுமா?

    "வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல் முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத நிலையிலும், வெயிலின் கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    வருவாய்த்துறையினர் மெத்தனம்: கல்வித்துறையில் 165 பேருக்கு "மெமோ"

    வருவாய்த்துறையினர் மெத்தனம் காரணமாக, கல்வித்துறையினர் 165 பேருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட தஞ்சை சட்டசபை தொகுதியில், அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில், கல்வித்துறையிலுள்ள ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள், தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை 1 ஆகிய பணிகளில் அமர்த்தப்படுவர்.

    விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி

    அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது

    2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. 

    பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு

    திருப்பூர் அருகே, அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே, சின்னகாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.காலை, பள்ளி துவங்கும் முன், தலைமையாசிரியர் குடிநீர் தொட்டி அருகில் சென்றுள்ளார்.அங்கு, துர்நாற்றம் வீசியுள்ளது.

    Friday, March 28, 2014

    ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது பெரும் ஏமாற்றம்!

    ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதேவேளை இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ளது.

    துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

    இடைநிலை ஆசிரியர்கள்
    1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books
    2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)
    3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).
    4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).
    5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books).
    பட்டதாரி ஆசிரியர்கள்
    1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).

    பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.

    ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.

    ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.

    தமிழக தலைமை செயலாளர் மாற்றம்

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக மோகன் வர்க்கீஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இம்மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து இவர் நியமிக்கப்படுகிறார்.

    வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

    வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.

    தலைமை ஆசிரியையை அடித்ததாக ஆசிரியர் கைது

    கல்லிடைக்குறிச்சி அருகே மேல ஏர்மாள்புரத்தில் தலைமை ஆசிரியையை அடித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அகஸ்தியர்பட்டி, மின் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (35). இவர் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல ஏர்மாள்புரம், அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

    கோடை வெயிலை எதிர்கொள்ள தினமும் 5 லிட் தண்ணீர் குடிக்க வேண்டும்

    கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்ப வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    விஏஓ தேர்வுக்கு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை

    விஏஓ தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.7.74க்குப் பின்பும், 1.7.93க்கு முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் குளறுபடி; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி

    10ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில், குளறுபடி நடந்துள்ளதால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். விருதுநகர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் ரமேஷ் அறிக்கை:"தற்போது நடைபெறும் 10 ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில்

    தனித்தேர்வுக்கு தள்ளப்படும் பள்ளி மாணவர்கள்

    பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ச்சி விகிதத்திற்காக தனி தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில ஆசிரியர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7,281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு

    Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
    No.1/1/2014-F-II (B)
    Government of India
    Ministry of Finance
    Department of Expenditure
    North BlockNew Delhi
    Dated: 27th March. 2014
    OFFICE MEMORANDUM
    Subject: Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014.
    The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.I-8/2013-E-II (B) dated 25th September, 2013 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 90% to 100% with effect from January, 2014.

    வாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

    * வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்...

    * வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல் ரூ 4800.

    10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 5 நாட்களில் முடிகிறது

    "தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்" என தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது.

    தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்

    நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, 'பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நுால் எது' என்று கேட்டு, அதற்கு, 'ஆப்ஷன்' விடைகளாக, 'பகவத் கீதை, நன்னுால், பைபிள்' ஆகியவை தரப்பட்டன.

    வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை

    வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    10ம் வகுப்பு தேர்வுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமா?

    பிளஸ் 2 தேர்வுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப்படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Thursday, March 27, 2014

    அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - விடைத்தாள் மைய மதிப்பீட்டுப் பணிக்கு முகாம் அலுவலர்கள் நியமித்து உத்தரவு

    பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி. சபிதா, இ.ஆ.ப., அவர்களை மாற்றிட தேர்தல் ஆணையத்திடம் TATA சங்கத்தின் சார்பில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

    தமிழ் உறவுகளே... நாம் தமிழில் பேசவேண்டாம்; இனி தமிழில் பேச முயற்சிப்போம்...

    இங்கிலாந்தில் 5 லட்சம் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு மதிப்பளித்து இலண்டன் தொடர்வண்டித்துறை தமிழில் பயணச் சீட்டு பெறுவதற்கு உதவி செய்கிறது. தானியங்கி இயந்திரம் மூலமாக தமிழில் பயணச் சீட்டை தேர்வு செய்ய உதவுகிறது.

    கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

    கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    "போனஸ்" மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

    தொலைதூரம் மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும், மூன்று டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவப் படிப்பில் சேர "போனஸ்" மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    ஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்

    12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. இனி அடுத்து படிக்கப்போகும் படிப்பைப்பற்றியோ, அல்லது எதிர்காலம் என்ன என்பது பற்றியோ வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும், சந்திக்கும் நபர்களிடமிருந்தும் பலவிதமான ஆலோசனைகள் இலவசமாக கிடைத்தவாறு இருக்கும்.

    அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்

    அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது.

    தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?

    தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

    'தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர். எம்.கார்த்திகேயன், மாணவர், அச்சுதா அகாடமி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: 'ப்ளு பிரிண்ட்' படி, கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் அனைத்தும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.

    ஓட்டுப்பதிவு நாளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

    லோக்சபா தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு, ஓட்டுப்பதிவு நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல், ஒன்பது கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல், 7ல் துவங்கி, மே மாதம், 12 வரை, தேர்தல் நடக்கிறது. இதில், தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: குழந்தைகள் மனித உரிமைக்குழு உத்தரவு

    தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தேதிகள் நெருங்கி வருகின்றன. அதேபோல், பள்ளித் தேர்வுகளும் முடிவடைந்து விடுமுறை விடப் பட இருக்கிறது.

    பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியை 'சஸ்பெண்ட்'

    மாணவியர் கூறிய பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப்பள்ளி தலைமையாசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை, மேலவெள்ளுர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவியரை, ஓவிய ஆசிரியர் ஞானஉதயம், 45, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த பிப்., 16ல், புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    Wednesday, March 26, 2014

    புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்

    கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    கோடை விடுமுறைக்கு பின் 2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்

    கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்… நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள். டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பி.எட்., சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

    தொடக்கக்கல்வி - கடவுச்சீட்டு பெற சென்னை, பாதுகாப்பு பிரிவு, காவல்துறை கண்காணிப்பாளரிடம் மறுப்பின்மை சான்று பெறுதல் சார்ந்த விண்ணப்பம் மாதிரி படிவம்

    மார்க்சிஸ்ட் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை அளித்த ஆசிரியர்கள்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இருவருக்கான டெபாசிட் தொகையை வழங்கினர். இதுதொடர்பாக பொதுப் பள்ளிக் கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை:

    செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்

    இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ள விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணியை  ஆஸ்திரேலியா துவக்கியுள்ளது.

    முறைகேடு நடக்காமல் இருக்க...தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு

    "பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்" என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

    மின் தடையை சமாளிக்க படிக்கும் நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கும் நிலையில், மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்தடையால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, படிக்கும் நேரத்தை மாற்றியமைக்க கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

    பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு

    பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

    இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

    8:00 மணிக்கு 'அட்டெண்டன்ஸ்':

    தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 7.31 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். குளறுபடிகள் இன்றி, தேர்வை நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. காலை, 9:15 மணிக்கே, தேர்வு துவங்குவதால், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர், அவரவர் தேர்வு மையத்துக்கு, காலை, 7:30 மணிக்கு சென்று விட வேண்டும். 8:00 மணிக்கு, வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

    வெயிலின் தாக்கம்: தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்க கோரிக்கை

    காலை 08.30மணி முதல் மதியம்1.00 மணிவரை என தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை குறைக்கக்கோரி அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவுசெய்துள்ளது. 

    கணினி அறிவியலில் தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

    "பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து....

    Tuesday, March 25, 2014

    CPS - மசோதா பாராளமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல் -The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.

        
                                       njhFg;G: gp. gpnunlupf; vq;nfy;];                                                           
    135-PAGE
    THE MINISTER OF FINANCE (SHRI P. CHIDAMBARAM): Mr. Chairman, I am grateful to the hon. Members, 15 of them, who have participated in this discussion on the Pension Fund Regulatory and Development Authority Bill.
    Sir, this Bill was first introduced in 2005. It was once reported by the Standing Committee on Finance chaired, at that time, by Maj. Gen. (Retd.) Khanduri. The Standing Committee favourably reported the Bill. There were one or two dissent notes, mainly from the Left Parties. That Bill lapsed with the dissolution of the

    எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

    எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு வைகோ வாழ்த்து

    நாளை தேர்வெழுதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

    TO VIEW RESULTS CLICK HERE...

    குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்  வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: தேர்வு அட்டவணை

    நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. 

    புதிய ஓய்வூதியத் திட்ட விவரம்: இனி தகவல் மையம் பராமரிக்கும், ஏஜிஎஸ் அலுவலகம் செல்ல வேண்டாம்

    அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விவரங்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் வர்ஷினி அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சேற்றில் சிக்கி மாணவி மரணம்; தலைமையாசிரியர் உட்பட மூவர் “சஸ்பென்ட்”

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர். பள்ளி ஆசிரியர்கள் மணி, சந்திரசேகர், பள்ளி உதவியாளர் மனோகரன் ஆகியோர் இவர்களை அழைத்து சென்றனர்.

    விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்

    தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது.

    பல கோடி வாசனைகளை அறியும் திறன் கொண்ட மனித மூக்கு

    மனிதர்களால் 10 ஆயிரம் கோடி வாசனைகளை அறிய முடியும் என்பதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 1920ல் 10 ஆயிரம் வாசனைக் கலவைகளை, மனிதர்களால் உணர முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின், யாரும் மனிதர்களின் மோப்ப சக்தி குறித்த ஆய்வில் ஈடுபடவில்லை.

    மத்திய அரசின் "ஆதார்" திட்டத்துக்கு மூடுவிழா

    "திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அரசின் எந்த ஒரு சேவையையும் பெற ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து

    "நாளை 10ம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள 7.31 லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது" என தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

    அனைவருக்கும் உயர்கல்வித் திட்டம்; பரிந்துரையை அனுப்பாத தமிழகம்

    முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

    நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

    விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

    தமிழக பள்ளிகளில் மதிப்பீடு முறை பற்றிய கட்டுரை; புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாமா?

    கடந்த 2009ல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'கன்டினுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவால்யுவேஷன்' (சி.சி.இ.,) எனப்படும் மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்தது. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், இந்த மதிப்பீட்டு முறை, முந்தைய முறையை விட சிறந்தது என்ற, காரணத்தால் இதனை வலியுறுத்தினார்.

    இட ஒதுக்கீடு வழங்கிய பள்ளிகளுக்கு நிதி வழங்குவதில் நீடிக்குது தாமதம்

    Monday, March 24, 2014

    239 பயணிகளுடன் காணாமல் போன விமானம் : மலேசிய பிரதமர் முக்கிய அறிவிப்பு

    கடந்த 8ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங் சென்றது மலேசிய விமானம். விமானத்தில் சென்ற 239 பேரில்

    மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


    மே மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.., விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள்

    மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்

    .மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர். விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில், இந்தாண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல்

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66

    PFRDA has issued necessary instructions to CRA for implementation of the withdrawal-ஒருவழியாக CPS திட்டத்தில் செட்டில்மென்ட் கொள்கையினை வெளியிட்டது PFRDA


    நன்றி-திரு- gp. gpnunlupf; vq;nfy;];


    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி: ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம்



    மதுரை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம்

    பவர்கட்... படிப்பும் 'கட்!'; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு



    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத

    அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு



    அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு உத்தரவு முற்றிலும் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக மாற்றுத்திறனாளிகளின்

    ஆசிரியர் வேலை கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்:வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்

    கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி..டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற

    TNTET - WEIGHTAGE - IN DETAIL

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி தேர்வு முடிவுகள் டிசம்பர் 2013 வெளியிடப்பட்டுள்ளன

    விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்


    தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.


    தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள்

    Sunday, March 23, 2014

    0ம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: பறக்கும் படை தயார்

    இன்னும் மூன்று நாட்களில் (26ம் தேதி) துவங்க உள்ள 10ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமில்லை, காலை9.15மணிக்கு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு

    இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.

    +2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பள்ளிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

    பள்ளிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேருடன் பறக்கும் படை ரெடி

    இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஆசிரியர்களுக்கு தொலைதூரதேர்தல் பணியை தவிர்க்கக் கோரிக்கை

    ஆசிரியர்களுக்குத் தொலைதூர தேர்தல் பணி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அண்ணாமலை பல்கலையில் பொது கலந்தாய்வு முறை அறிவிப்பு

    'அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் நடைபெறும்' என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், நடைமுறைப்படுத்தவில்லை: குமுறும் ஆசிரியர்கள்

    ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    அண்ணாமலை பல்கலையில் பொது கலந்தாய்வு முறை அறிவிப்பு

    'அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் தொழிற்கல்வி நிலையங்களுக்கான சேர்க்கைச் சட்டம் விதிமுறைகள்படி, மாணவர்கள் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் நடைபெறும்' என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10க்குள் முடிக்க உத்தரவு

    ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை, ஏப்ரல், 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என்று தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதி தொடங்கியது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.

    Saturday, March 22, 2014

    தொடக்கக் கல்வித்துறையில் 01.01.2013ன் PANEL-ல் உள்ள ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வழக்கு தொகுப்பு

    தொடக்கக்கல்வித் துறையில் நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் 01.01.2014க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்கபட்டுள்ளதாலும் பட்டதாரிகளுக்கான காலிபணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 253 மட்டுமே உள்ளதாலும் 01.01.2013 Panel-லில் இடம் பெற்று இதுவரை பதவி உயர்வு பெறாத ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு ஒரு பணியிடத்தை நிறுத்தி (KEEP ONE POST) வைக்க இருபது (20 )க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

    குழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி!

    பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம். மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின் பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    சர்வதேச சி.பி.எஸ்.இ., பற்றி விழிப்புணர்வு தேவை: யு.ஜி.சி., அறிவுறுத்தல்

    வெளிநாட்டு பல்கலைகளில், இந்திய மாணவர்கள் சேர சி.பி.எஸ்.இ., சர்வதேச பாடத் திட்டத்தில் படித்திருப்பது அவசியம் என்பதால், இப்பாடத் திட்டம் குறித்து உறுப்பு கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

    மே முதல் வாரத்தில் பொறியியல் சேர்க்கை விண்ணப்பம்

    மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்துள்ளது.

    மழைநீரை மறந்து... தண்ணீருக்கு தவமா?

    நிஜமாகி விட கூடாது தாத்தாவின் கதை! வீட்டில் வாகனங்களை தண்ணீர் ஊற்றி கழுவியதாக, இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின் தாத்தாக்கள் சொல்லப் போகும் கதையை கேட்கும் பேரப் பிள்ளைகள், "சும்மா புருடா விடாதீங்க தாத்தா... காரை தண்ணீர் ஊற்றி கழுவினாராம்.

    ஆசிரியர் தகுதி தேர்வு: 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

    Friday, March 21, 2014

    12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே9ல் வெளியீடு

    பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே9ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன்

    பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில் இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.

    முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல்

    தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

    மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    வரும் மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.01.2014, 6.02.2014 மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட பதவிக்கான எழுத்து தேர்வு (குரூப்&2 தேர்வு) 18.05.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது.

    3 நபர் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசாணை வெளியிட தாமதம் ஏன்?அரசு தரப்பில் மேல் முறையீடா?

    6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர். இக்குழு 20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாக நிரப்ப வேண்டும் என்றும் அவ்வாறு நிரப்பப்படாத விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    கல்வி மாவட்டத்தை பிரிக்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    நாமக்கல் கல்வி மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்க வேண்டும்" என நாமக்கல் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழகத்தின், நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    10ம் வகுப்பு தேர்வு நேரம்: அரசு ஆசிரியர்களிடையே குழப்பம்

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி மாற்றியமைத்தது.

    பொது தேர்வுகளில் எந்த மாதிரி பேனாக்களை பயன்படுத்தலாம்

    பொது தேர்வுகளில் நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள "ஜெல்" பேனாக்களையும் விடை எழுத பயன்படுத்தலாம் என கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில் விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர் நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.

    அழகப்பா பல்கலை., மத்திய பல்கலையாக மாறுமா?

    காரைக்குடி அழகப்பா பல்கலையை, மத்திய பல்கலையாக மாற்ற ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும்" என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பல மாவட்டங்களில், அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வரும் இடங்களில், நர்சிங் கல்லூரியும் சேர்ந்து இயங்கி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    தேர்வு மையம் கேட்டு மாணவர்கள் மறியல்

    கல்லல் முருகப்பா பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு முருகப்பா பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, சாந்திராணி பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் தான் தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

    10ம் வகுப்பு வினாத்தாள்கள் வருகை

    விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா தாள்கள் நேற்று விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிகிறது.

    பிளஸ்–2 உயிரியல், தாவரவியல் தேர்வுகள் கடினம்: 200–க்கு 200 மதிப்பெண் பெற முடியாது, மாணவர்கள் கருத்து

    உயிரியல், தாவரவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்ததால் 200–க்கு 200 மதிப்பெண் பெற முடியாது என்று பிளஸ்–2 மாணவர்கள் புலம்பினார்கள்.
    198 பேர் வரவில்லை
    அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 3–ந்தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இந்த நிலையில் உயிரி யல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் ஆகிய பாடங் களுக்கான தேர்வு நேற்று நடந்தது.

    பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

    பிளஸ் 2 தேர்வில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அறிவியல், கணக்கு தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன.பிளஸ் 2 தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்கள் முடிந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

    திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது. தேர்வுகள் முடிந்து கடந்த 10ம் தேதி இரவு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    போலி டாக்டர்கள்: நாடு முழுவதும் சி.பி.ஐ., "ரெய்டு'

    ரஷ்யா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில், மருத்துவ படிப்பு முடித்து, நம் நாட்டில் பணியாற்ற, தேவையான தேர்வு களை எழுதாத; முறையாக பதிவு செய்யாத ஏராளமானோர், டாக்டர்களாக பணியாற்றி வருவதாக, கிடைத்த தகவலை அடுத்து, சி.பி.ஐ., நேற்று விசாரணை மேற்கொண்டது.