Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 14, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு: என்.சி.டி.இ., உத்தரவில் மாற்றம்: கல்வித்துறை செயலர் மீது வழக்கு

    ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    ராஜபாளையம் இன்பக்குமார் தாக்கல் செய்த மனு:
    தேசிய ஆசிரியர் கல்விக்குழு (என்.சி.டி.இ.,) அறிவிப்பின்படி 2010 ஆக.,23 க்கு பின் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி பி.ஏ., மற்றும் பி.எஸ்சி., முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் தகுதித்தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது. அதில் 2011 ஜூலை 29 ல் பள்ளிக்கல்வித்துறை சில மாற்றங்களை செய்தது. 'அந்த அறிவிப்பிற்கு பின் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரையறுக்கப்பட்ட 32 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்து பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதித் தேர்வு எழுத முடியும்' என தெரிவிக்கப்பட்டது. எனவே, 'தேசிய ஆசிரியர் கல்விக்குழு பிறப்பித்த உத்தரவை மட்டுமே செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதில் மாற்றம் செய்யக்கூடாது' என உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். 'தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க ஜூலை 24 ல் ஐகோர்ட் உத்தரவிட்டது; ஆனால் நடவடிக்கை இல்லை. முதன்மைச் செயலர் சபீதா மீது கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி, அரசு வக்கீல் குணசீலன் முத்தையா ஆஜராகினர். அரசுத்தரப்பில் ஜன.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    1 comment:

    Unknown said...

    Mr.Inbakumar.. Please add point in your case. (Lakhs of teachers may thank you)

    1 "TET exam should be conducted every year.. one or more times" .

    2 But TRB did not conduct TET exam, more than 15 months.

    3. This is also VIOLATION of RULES.

    4. Education Department and its head.. never care about rules & regulations. And they never care about court orders also

    5. Education dept did not publish any official news about NOT CONDUCTING TET exams. They failed to give correct information to the teachers who are waiting to write TET exams.

    6. If the Education department show the reasons of "Matters in Court"...If the court take 20 years to finish the case.. then ..there is NO EXAM for TET??

    7. Remember..all court cases are.. because of the poor management in education depart. They have no knowledge to frame rules & regulations.

    8 Poor management must be dismissed. Because they are eating/getting peoples money as salary