Pages

Tuesday, December 23, 2014

பாதை இல்லாமல் பரிதவிக்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்

அருப்புக்கோட்டையில் அலுவலகம், மாணவர் விடுதிக்கு செல்ல பாதை இல்லாமல் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் உள்ள டவுண் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இதற்கு பின்னால் உதவி தொடக்க கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், அரசு மாணவர் விடுதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பம்பிங் ஸ்டேஷன் உட்பட அரசு அலவலுகங்கள் உள்ளன.

இவற்றிற்கு பாதை டவுண் போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பு வழியாக உள்ளது. இங்கு கேட் அமைத்து உள்ளனர். அலுவலக நேரங்களில் மட்டும் திறந்து விடுவர். தற்போது இந்த பாதையை பூட்டு போட்டு அடைத்து விட்டனர். விடுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் 1 கி.மீ., தூரம் சுற்றி சென்றனர். ஏ.இ.ஒ., அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதை இன்றி தவித்தனர். தாசில்தார் ராஜா, துணை தாசில்தார் ராமச்சந்திரன், எஸ்.ஐ., முனியாண்டி, எஸ்.எஸ்.ஐ., திருமலைகுமார் மற்றும் அதிகாரிகள் தற்காலிமாக கேட்டை திறந்து விட்டனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வருவாய் துறை அதிகாரிகள் மாற்று பாதைக்கான இடங்களை சர்வே செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.