Pages

Wednesday, December 3, 2014

உயர்கல்வி உதவித்தொகைகளை உயர்த்திய மத்திய அரசு!


ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, உதவித்தொகைகளுக்கான அடிப்படை நிதியளவை, பல்கலைக்கழக மானியக்குழு அதிகரித்துள்ளது.


இதன்படி, JRF எனப்படும் Junior Research Fellowship திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, ரூ.16 ஆயிரத்திலிருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், SRF எனப்படும் Senior Research Fellowship என்ற திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையின் அளவு ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.28 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ராஜ்யசாபாவில் பேசிய மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அடிப்படை அறிவியல் துறைகளில், JRF மற்றும் SRF ஆகியவற்றில் உயர்த்தப்பட்டுள்ள தொகையானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகரானதாக இருக்கும்" என்றார்.

மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில், உதவித்தொகைகளின் உயர்வு, 55% என்பதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.