உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.
டில்லியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மற்றும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் தூதரக பிரதிநிதிகள் முன்னிலையில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின் கீழ், இந்தியா, 1,300 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதில், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான மொத்த செலவில், 30 சதவீதமும், உயர்தரமான சென்சார் கருவிகள், முனைப்பு சாதனங்கள் போன்றவற்றுக்கு, 70 சதவீதமும் ஒதுக்கப்படும். ஹவாய் தீவில், 4,050 மீட்டர் உயரமுள்ள மானா கி சிகரத்தில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட உள்ளது. இதன் முகப்பு லென்ஸ், 30 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும். இந்த தொலைநோக்கியில், 500 கி.மீ., தூரத்தில் உள்ள, சிறிய நாணயம் போன்ற பொருளைக் கூட துல்லியமாக பார்க்க முடியும். மேலும், வானியல் விஞ்ஞானிகள், 1,300 கோடி ஒளி ஆண்டுகளின் தூரத்தையும், 20 - 40 கோடி ஆண்டுகளில் உருவான பழமையான நட்சத்திரக் கூட்டங்களையும் ஆய்வு செய்யலாம். தற்போது, ஸ்பெயினில், லா பால்மாவில் தான், உலகின் மிகப் பெரிய ஜி.டி.சி., தொலைநோக்கி உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.