பெங்களூரு பள்ளிகளில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதற்கு மாநில அரசு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேர்க்கையின் போது பள்ளி நிர்வாகம் தரும் வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை என்று கர்நாடக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் வேலைக்கு சேருபவரின் பின்புலம் தெரியாமல் அவரை பணிகளில் அமர்த்துவது ஏன் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு ஊழியர்களும் பொறுப்புணர்ந்து 24 மணி நேரமும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் சி.சி.டி.வி கட்டாயம் பொருத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. பெண் ஓட்டுநர்கள், பெண் உதவியாளர்கள் அதிகம் நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்ட்டிருந்தது.
No comments:
Post a Comment