Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 11, 2014

    விலை உயர்ந்த செல்போன் வாங்கிக் கொடுக்காததால் 8 ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுக்காததால் 8-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள டெண்டுல்லியா கிராமத்தை சேர்ந்த விவசாயி மபிபுல் சர்க்கார்.இவருடைய மகன் மசூத் சர்க்கார்(15). அங்குள்ள டெண்டுல்லியா உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
    மபிபுல் சர்க்கார் குடும்பத்தினர் ஏற்கனவே 2 செல்போன்களை பயன்படுத்தி வந்தனார்.
    இந்த நிலையில் மாணவன் மசூத் சர்க்கார் தனது தந்தையிடம் விலை உயர்ந்த “டச் ஸ்கிரீன்“ செல்போன் வாங்கித் தரும்படி கேட்டு அடம் பிடித்தான் . அதற்கு தந்தை தன்னால் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.இதனால் மனம் உடைந்த மசூத் சர்க்கார் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டான். மயங்கி விழுந்த மசூத் சர்க்காரை லால்பாக் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மசூத் சர்க்கார் ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டான். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments: