விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுக்காததால் 8-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள டெண்டுல்லியா கிராமத்தை சேர்ந்த விவசாயி மபிபுல் சர்க்கார்.இவருடைய மகன் மசூத் சர்க்கார்(15). அங்குள்ள டெண்டுல்லியா உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
மபிபுல் சர்க்கார் குடும்பத்தினர் ஏற்கனவே 2 செல்போன்களை பயன்படுத்தி வந்தனார்.
இந்த நிலையில் மாணவன் மசூத் சர்க்கார் தனது தந்தையிடம் விலை உயர்ந்த “டச் ஸ்கிரீன்“ செல்போன் வாங்கித் தரும்படி கேட்டு அடம் பிடித்தான் . அதற்கு தந்தை தன்னால் விலை உயர்ந்த செல்போன் வாங்கி தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.இதனால் மனம் உடைந்த மசூத் சர்க்கார் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டான். மயங்கி விழுந்த மசூத் சர்க்காரை லால்பாக் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மசூத் சர்க்கார் ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டான். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment