Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 10, 2014

    தினக்கூலி பணியாளர் சம்பளம் அதிகரிக்கும், 37 ஆண்டுக்கு பின் மறு நிர்ணயம் செய்கிறது அரசு

    தமிழகத்தில், தினக்கூலி பணியாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை, 37 ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசு மறு நிர்ணயம் செய்கிறது. இதற்கான ஆலோசனை துவங்கி உள்ளது. ஒரு லட்சம் பேர்:தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், துப் புரவு பணி, கொசு ஒழிப்பு, மழைநீர் கால்வாய் பராமரிப்பு, குடிநீர் தொட்டி பராமரிப்பு என, பல்வேறு நிலைகளில், ஒரு லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.தமிழக அரசு, 1977ல், திறன் படைத்த தொழிலாளர்களுக்கு, 145 ரூபாய்; சாதாரண தொழிலாளர்களுக்கு, 85 ரூபாய் என, குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்தது; அதன்பின், திருத்தம் செய்யவில்லை.
    மாநகராட்சி, நகராட்சிகளில் ஓரளவு சம்பளம் தரப் பட்டாலும், ஊராட்சி அளவில், நிலைமை மோசமாக உள்ளதால், 37 ஆண்டுகளுக்குப் பின், குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.
    தொழிலாளர் நல துணை ஆணையர் ராதாகிஷ்ணன் தலைமை யில், செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட, 11 பேர் கொண்ட, குறைந்தபட்ச கூலி மறு நிர்ணயக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதில், அரசு பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
    பரிந்துரை:இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. தொழிலாளர், தொழிற்சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்தனர்.மறு நிர்ணயக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்த உள்ளோம். அடுத்த கூட்டம், நவ., 28ம் தேதி, மதுரையில் நடக்கும். தொழிலாளர் பணி இடங்களிலும் ஆய்வு செய்வோம். ஆலோசனை முடிவில், குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.
    தொழிலாளர் எதிர்பார்ப்பது என்ன?
    *தினசரி சம்பளமாக தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர்களுக்கு - 500 ரூபாய், பிற தொழிலாளர்களுக்கு - 400 ரூபாய் சம்பளம் வேண்டும்.
    *மாத ஊதியம் என்றால் குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்; இதர படி, சலுகைகள் தர வேண்டும்.
    *பகுதிநேர பணியில் உள்ள, குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்களுக்கு, 200 ரூபாய் என, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
    *ஒப்பந்தம் சார்ந்த பணி என்றால், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை, ஒப்பந்ததாரர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    No comments: