Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, November 9, 2014

    28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

    திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.
    அதன்படி, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெறப்பட்ட, ஓய்வூதியதாரர்களின் கோப்புகள் மீதான, தேவையான ெதளிவுரைகள், தமிழக அரசிடம் இருந்து கிடைத்ததும், திருத்திய ஓய்வூதியத்தை வழங்க உத்தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தமிழக அரசு, ஒரு நபர் பரிந்துரை யின் பேரில், 100 உத்தரவுகளை, கடந்த ஆண்டு, ஜூலை, 23ம் தேதி ெவளி யிட்டது. இதன் மூலமும். திருத்திய ஓய்வூதியம் தெடார்பான கோப்புகள் வந்து குவிகின்றன.இதனால், அதிக வேலைப்பளு ஏற்பட்ட போதும், சிரமத்திற்கிடையில், ஓய்வூதிய தாரர்கள், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை, 28,889 ஓய்வூதியதாரர்களுக்கு, திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட விவரங்கள் வேண்டி, 2192 கோப்புகள், சம்பந்தப்பட்ட துறை அலுலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனவே, தங்கள் கோப்புககளை திரும்ப பெற்றவர்கள்; இனி கோப்புகளை அனுப்புபவர்கள், ஓய்வூதிய கொடுப்பு ஆணை எண், பணிப்பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்திற்கான முகாந்திரம், பணிப்பதிவேடு கிடைக்காவிட்டால், நான்காவது ஊதியக்குழு அடிப்படையிலான, ஊதிய அட்டவணை ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.மேலும், ஓய்வூதியதாரர்களின் விருப்பப்படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும், கருவூலம் அல்லது சார் கருவூலத்தின் பெயர் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், சென்னை, அண்ணாசாலையில் உள்ள, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், துணை மாநில கணக்காயரை (ஓய்வூதியம்) தொடர்பு கொள்ளலாம்.

    No comments: