அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி இயக்குனர்களும் (கிரேடு–1) போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று (10–ந்தேதி) முதல் 21–ந்தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் மட்டும் முதன்மை கல்வி அதிகாரிக்கு பதிலாக நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (கோட்டூர்புரம் பாலம் அருகில்) விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெறலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500.
எஸ்.சி.,எஸ்.டி. வகுப்பினருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் ரூ.250 விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள செலானை பயன்படுத்தி பாரத் ஸ்டேட் வங்கியிலோ, இந்தியன் வங்கியிலோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்து விண்ணப்பித்த விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பக்கூடாது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
1807 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்ப வினியோகம் சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் இன்று தொடங்கியுள்ளது. விண்ணப்ப படிவங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் விண்ணப்ப படிவம் வாங்க நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாங்குவதற்கு கூட்டம் குவிந்தது. ஆண், பெண் பட்டதாரிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்க ஆர்வத்துடன் வந்திருந்தனர். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா விண்ணப்பம் முறையாக வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.
No comments:
Post a Comment