Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 12, 2014

    பணி வரன்முறை செய்யாததால் 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவிப்பு


    ஆறு ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள் தவித்து வருகின்றனர். அரசு மேல்நிலை பள்ளிகளில் 1996ல் தொகுப்பூதியத்தில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2008ல் தேர்வு நடத்தப்பட்டு 1,060 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.


    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 140 பேர் மட்டும் தேர்ச்சி பெற்று பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்ச்சி பெறாத 656 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை பணி வரன்முறை செய்யப்படவில்லை. இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்ற பணப்பலன் கிடைக்கவில்லை. மற்ற ஆசிரியர்களை போல் இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இதனால் 1,200 பேரும் தவித்து வருகின்றனர்.

    தமிழ்நாடு மேல்நிலை முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: ஆதிதிராவிடர் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 50 கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு ஆக.,27 ல் கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. முதுகலை பட்டம் முடித்தும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக உள்ள 656 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்குள் எங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பணி வரன்முறைப்படுத்த வேண்டும், என்றார்.

    3 comments:

    kanna said...

    latchakkanakkil vasool vettai nadathi
    600 perin vayitril adithu kodeeswaran aana
    computer instructer asso thalaivan vaazhga

    kanna said...

    computer instructor association thalaivar kodeeswaran aanathu eppadi visaranai merkollapaduma?

    Unknown said...

    Padichavanuku vealai kidaikalanu kavalai....vealai kidaichavanuku salary pathala...increment ila...high posting kidaikalanukavalayam...enna kodumai sir ithu...