தினமலர்' டி.வி.ஆர்., அகாடமி, கல்விமலர் மற்றும் நேரு குரூப் ஆப் இன்ஸ்டிட்யூட்ஸ் சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி வால்பாறை துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கோவை நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் வழங்கிய 'டிப்ஸ்':
கல்பனா, தமிழ்: பதட்டமின்றி தெளிவாக எழுத வேண்டும். மேற்ேகாள் காட்டி விடையளிக்கலாம். அடித்தல், திருத்தல் இன்றி எழுத வேண்டும். பெரு வினாக்களுக்கு உட்தலைப்பிட்டு எழுதணும். பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதால், அனைத்து வினாக்களுக்கும் எளிதாக விடையளிக்கலாம். துணைப்பாடங்களை புரிந்து படித்தால், அதிக மதிப்பெண் பெறலாம்.
ராதிகா, ஆங்கிலம்: படிக்கும் போது, புரிந்து படிக்க வேண்டும்; இலக்கண பாடங்களை தினசரி படித்து எழுதி பார்க்கணும். ஆங்கில பாடத்தை பொறுத்தவரை எழுத்துப்பிழையில்லாமல் எழுத வேண்டும். தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். மனப்பாட பாடல் பகுதியை நன்கு படித்துக்கொள்ள வேண்டும். வினாத்தாளில் இல்லாத வினாக்கள் தெரிந்தது என்று விடையளிக்கக்கூடாது. பேராகிராப் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, தெளிவாக படிக்கும் வகையில், விடையளிக்க வேண்டும். இரண்டாம் தாளில், விளம்பர பகுதி வினாவிற்கு எக்காரணத்தை கொண்டும் ஸ்கெட்ச் பென்சில் பயன்படுத்தக்கூடாது.
ரேவதி, கணிதம்: கணிதப்பாடத்தை பொறுத்தவரை பயிற்சி அவசியமானதாகும். மனப்பாடம் செய்யாமல், கணிதத்தை எழுதி எழுதி பார்க்க வேண்டும். சூத்திரங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். ஜாமிண்ட்ரி, கிராப்ஸ் நன்றாக பயிற்சி செய்தால், தேர்வில் எளிதாக 20 மதிப்பெண் பெறலாம். செட்லாங்வேஜ், அல்ஜிப்ரா, மேட்ரிக்ஸ், புள்ளியியல் பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். இவற்றை படித்தால், எளிதாக 40 மதிப்பெண்கள் பெற முடியும். அதிக மதிப்பெண் பெற விரும்புபவர்கள் தினசரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பியூலா, அறிவியல் : புத்தகத்தின் பின்பகுதியிலிருந்து வினாக்கள் அதிகமாக கேட்கப்படும். அதனால், அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டுமென்றால், தினசரி பயிற்சி வேண்டும். எட்டாவது பாடத்திலிருந்து ஐந்து மதிப்பெண் வினாக்கள் அதிகம் கேட்க வாய்ப்புள்ளது. பிராபளம்ஸ், பார்முலா, ஈக்குவேசன் ஆகியவை தெளிவாக இருக்கணும். படம் வரைந்து, அதன் அருகேயே விளக்கம் எழுத வேண்டும். தவறின்றி எழுதினால், முழுமதிப்பெண் பெறலாம்.
பரிமளம்: உயிரியல் பாடத்தில், முழு மதிப்பெண் பெற முயற்சியும், பயிற்சியும் அவசியம். பாடத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களை நன்றாக படித்தால், 75 சதவீதம் மதிப்பெண் பெறலாம். பதட்டமின்றி தேர்வெழுதினால், பொறுமையாக விடையளித்தல் அவசியம்.
சித்ரா, சமூக அறிவியல்: ஒரு மதிப்பெண் வினா, காலக்கோடு, வரைபடம் படித்தால், எளிதாக 50 மதிப்பெண் பெறமுடியும். வினாக்களுக்கு பாயின்ட், பாயின்டாக விடையளித்தால், முழுமதிப்பெண் பெறலாம். சுதந்திர போராட்ட பாடத்திற்கு பின்னுள்ள ஆண்டுகளை மனதில் வைத்துக்கொண்டால், ஐந்து மதிப்பெண் பெறலாம். கதை எழுத வேண்டாம்; புரிந்து படித்தால், சமூக அறிவியலில், 100 மதிப்பெண் பெறலாம்.
No comments:
Post a Comment