Pages

Friday, October 31, 2014

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து முறையான ஆணை பெற்றபின் அத்தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.