Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 6, 2014

    காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நாளை திறப்பு

    காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) திறக்கப்பட உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக அக்டோபர் 5-ஆம் தேதிக்குப் பதில் அக்டோபர் 6-ஆம் தேதி அரசுப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.


    முப்பருவ முறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்காக சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழகத்தில் முப்பருவ முறை அமலில் உள்ளது. இந்த முறையின் கீழ் ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இரண்டாம் பருவம் தொடங்க உள்ளது. இந்தப் பருவத்துக்கான புத்தக விநியோகம் தொடர்பாக அதிகாரிகள் கூறியது:

    ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்காக சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

    இந்தப் புத்தகங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே விநியோகம் செய்யப்பட்டன. சில பள்ளிகளில் புத்தக விநியோகமும் செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி திறக்கப்படும் நாளான அக்டோபர் 7-ஆம் தேதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.

    மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள்: ஜனவரியில் தொடங்க உள்ள மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்துக்குள்ளாக மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிடும்.

    இப்போது அச்சிடப்பட்ட புத்தகங்களை நீண்ட தூறும் எடுத்துச்செல்லும் சிரமத்தைக் குறைப்பதற்காக, அந்தந்த மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே புத்தகங்களை அச்சிடும் வகையில் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: