Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 15, 2014

    "நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை"

    "நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை" என்று புளியம்பட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். புளியம்பட்டியில் புத்தக திருவிழா ஐந்து நாட்கள் நடந்து முடிந்தது. 25 பதிப்பகங்களின் பல ஆயிரம் புத்தகங்கள், கல்வி குறுந்தகடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தினமும் மாலையில் சொற்பொழிவு நடந்தது. மூன்றாம் நாளன்று இளசை சுந்தரம் தலைமையில், மனித வாழ்வை நடத்துவது விதியா? மதியா? நிதியா என்னும் சொல்லரங்கம் நடந்தது.


    எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசிக்க நேரமிருக்கு என்னும் தலைப்பில் பேசியதாவது: பொதுவாக எந்த வேலை சொன்னாலும் நேரமில்லை என்று சொல்வது வழக்கம். இது ஏமாற்று வேலை. எனக்கு மனமில்லை என்று சொல். நேரமில்லை என்று சொல்லாதே என்பது அறிஞர் வாக்கு. இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 32 பக்கங்கள்தான் படிக்கின்றனர். ஆனால் வெளிநாட்டவர் ஒரு ஆண்டுக்கு 1,200 பக்கங்கள் படிக்கின்றனர்.

    ஒரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரியாது. நிறைய படியுங்கள். ஏதாவது ஒரு வாசகம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். திட்டமிட்டு செயல்பட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு லேனா தமிழ்வாணன் பேசினார்.

    பேச்சாளர் பழ. கருப்பையா, ஒரு சொல் கேளீர் என்னும் தலைப்பில் பேசுகையில், “மனிதன் பிறக்கும்போது மூச்சை இழுக்கிறான். இறக்கும்போது மூச்சை விடுகிறான். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதுதான் மனித வாழ்க்கை. நல்லறிவு பெற்ற நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்" என்றார்.

    No comments: