Pages

Tuesday, October 28, 2014

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல்: புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது. 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் அந்தந்த அலுவலகங்களில் இருந்து நேரடியாக வங்கிக்கே பட்டியல் அனுப்பப்படும். தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'வெப் பே-ரோல்' முறையில் சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண் துறை அலுவலர்களுக்கு சோதனை அடிப்படையில் கடந்த மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் ஊழியர் ஒருவருக்கு இந்த நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். 'கடமைக்காக' கூட்டம் போட்டு இது தான் 'வெப் பே-ரோல்' என வாய்மொழியாக கூறிவிட்டனர்; கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கவில்லை.

இதனால் உழியர்கள் தடுமாறுகின்றனர். துறை அலுவலர்களின் பணிமூப்பு விபரங்களை பதிவு செய்யவே நாட்கள் குறைவாக உள்ளது; இந்நிலையில், இம்மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த முறையிலே சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல உதவியாளர்களுக்கு இதற்கான 'யூசர் நேம், பாஸ்வேர்டு' ஆகியவற்றை கருவூலத்துறையினர் கொடுக்கவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.