Pages

Friday, October 24, 2014

ஆசிரியர் பற்றாக்குறையால் சரிந்தது மாணவர் சேர்க்கை

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது.


கொத்தபுரிநத்தம், அரசு நடுநிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தில் சென்று விட்டனர். இதனால், காலியான பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படாமல், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வருவதால், எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.