அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
1 comment:
IAS OFFICERS ARE WASTE THEY ARE SLEEPING
Post a Comment