Pages

Tuesday, October 28, 2014

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நாளை இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில், 2014-15ம் கல்வியாண்டுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று, வழக்கு நிலுவையால்  இதுவரை அப்பணியிடத்தில் சேர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுசார்பாக வழக்கை விரைவில் முடிக்க அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதையடுத்து நாளை இறுதி தீர்ப்பு வழங்கப்படும்
என நீதிபதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், இறுதி தீர்ப்பு வெளியானவுடன் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் உடனடியாக பணியில் சேருவதற்கான உத்தரவு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.