சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இது மட்டுமின்றி, ஆராய்ச்சிகளில் சிறப்பாக ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி அப்துல் கலாம் சிறப்பித்தார். இதற்கடுத்து சிறப்புரை ஆற்றிய அவர் தனது பள்ளிப்பருவத்தின் போது பாடம் நடத்திய ஆசிரியர்கள் சிறப்பாகப் பயிற்றுவித்ததால் தான் தன்னால் இத்தகைய உயரிய நிலையை அடைய முடிந்தது என்று தெரிவித்தார். மேலும், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அந்த ஆசிரியர்கள் மிகவும் தத்ரூபமாக எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் கூறினார். எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் 6 மாத காலம் செயல்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் நகர்ப்புற மாணவர்களைப் போலவே கிராமப்புற மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment