Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 11, 2014

    டிஇடி ரத்து செய்யக்கோரி ஆசிரியர் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் தமிழக அரசின் உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. கலைவாணி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.
    இந்நிலையில், நேற்று தலைமை ஆசிரியையின் பெயருக்கு ஒரு தபால் வந்தது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர் குடியிருப்புக்கு வெடிகுண்டு வைக்கப்படும்.
    மேலும், சேந்தமங்கலத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகமான எழுத்து பிழைகளுடன், கிறுக்கலாக அந்த கடிதம் காணப்பட்டது. தலைமை ஆசிரியை கலைவாணி, கொடுத்த புகாரின் பேரில், வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    1 comment:

    Unknown said...

    Please don't Do such activities we are teacher we r guide to our society by ARGTA brte association m.o madurai b.o villupuram 9443378533