Pages

Friday, September 19, 2014

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம் 'தினமலர்' செய்தி எதிரொலி

மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
    நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
    எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
    இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
    ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

    இப்படிக்கு
    சத்தியமூர்த்தி

    We can change everything,
    All come to chennai
    21.09.2014

    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy (erode)
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.