Pages

Wednesday, September 24, 2014

ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலங்களில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, எஸ்.விமலா ஆகியோரும் செப்டம்பர் 30-ந் தேதி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.