"ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி" என்ற அற்புத வாக்கிற்கிணங்க தணிகையிலே பிறந்து தமது எளிய ஆசிரிய பணி ஏற்று கொண்ட கொள்கையாலும், உயரிய சிந்தனையாலும், புத்தக வாசிப்பை நேசித்து ஆசிரிய பணியை சுவாசித்து, கடுமையான உழைப்பால் இந்தியாவின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்து, உழைப்பால் உயர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துகாட்டிய "பாரத ரத்னா சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன்" அவர்களின் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடும், இந்தருணத்தில் எழுத்தறிவு தீபத்தை கையில் ஏந்தி, ஏழ்மையை விரட்டமுடியும் என்று உறுதிபாடோடு,
கோவிலுக்கு மேலாக பள்ளியை ஒரு கலைகோயிலாக பன்திறன் கொண்ட வல்லுநர்களாக உருவாக்கும் கலைகோயிலாக திகழ்கிற இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அன்போடும், பணிவோடும் பிள்ளைகளை அரவணைத்து இத்தேசியத்தை வளமான இந்தியாவாக உருவாக உறுதியேற்போம்.
"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னையாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
இரா. தாஸ், பொதுச் செயலாளர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment