அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகிறது.
பல்கலையின் கீழ், பல மாவட்டங்களில், உறுப்பு பொறியியல் கல்லூரிகள் (பல்கலை நடத்துவது) இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியில், 450 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஓரிரு நாளில், அண்ணா பல்கலை வெளியிட உள்ளது.
எவ்வித போட்டித் தேர்வும் இல்லாமல், நேர்முகத் தேர்வு அடிப்படையில், 450 இடங்களும் நிரப்பப்படும் என பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
No comments:
Post a Comment