Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 10, 2014

    வங்கி எஸ்.எம்.எஸ்.,களுக்கு கட்டணம் : அக்., 1ம் தேதி முதல் அமல்

    வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

    பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. எஸ்.எம்.எஸ்., என்ற அடிப்படையில் கணக்கிடாமல், எஸ்.எம்.எஸ்., சேவைக்கு, ஆண்டுக்கு, 100 ரூபாய் வசூலிக்கப்படும் என, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
    எஸ்.எம்.எஸ்., சேவை கட்டாயம் இல்லை. கூடுதல் சேவையாக இச் சேவையைப் பெற விரும்புவோர், பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து, கனரா வங்கி அதிகாரியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொது செயலருமான சீனிவாசன் கூறியதாவது: வங்கிக் கணக்குகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வராமலேயே, தன் கணக்கை, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இயக்கலாம். இதனால், அவரது கணக்கு குறித்த விவரங்களை, உடனுக்குடன் அவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், வங்கிக்கு ஏற்படுகிறது. கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகியவை குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும், எஸ்.எம்.எஸ்., சேவை கூடுதல் சேவையாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்ப, பொதுத்துறை அல்லது தனியார் தொலைத் தொடர்பு சேவையை அணுக வேண்டும். இதற்கு வங்கி, கட்டணம் செலுத்துகிறது. இதன்மூலம், வங்கிக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது
    என்பதற்காக, மிகக் குறைந்த கட்டணத்தில், எஸ்.எம்.எஸ்., சேவையை அளிக்கிறோம்.
    இதன் மூலம், வாடிக்கையாளருக்கு கூடுதல் வசதி கிடைக்கிறது. இச்சேவை தேவையில்லை என நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரத்து செய்து கொள்ளலாம்.
    தொலைத் தொடர்பு சந்தையில், சாதாரணமாக ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்ப என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட மிகக் குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.
    இச்சேவை மூலம், மூன்றாம் நபர் வங்கிக் கணக்கை இயக்குவது தடுக்கப்படும். மீறி இயக்கினால் அவர்களை பிடிக்கவும் எஸ்.எம்.எஸ்., சேவை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: