போட்டித் தேர்வு நடத்தி, 2,176 டாக்டர்களை புதிதாக தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பல மருத்துவமனைகளிலும், டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் 34 பல் டாக்டர்கள் உட்பட 2,176 டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
போட்டித் தேர்வு மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளோர், செப்., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
போட்டித் தேர்வு, செப்., 28ம் தேதி நடக்க உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், &'www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment