சட்டசபையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், வீரமணி அறிவித்த புதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி, அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 17ல், பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, துறை அமைச்சர், வீரமணி, சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 8ம் வகுப்பு வரை படித்து, படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிப்பது; 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் வழங்கு வது உட்பட பல திட்டங்களை, அமைச்சர் வெளியிட்டார். மேலும், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு, 1.63 கோடி ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளித்தல் உட்பட, 6 வகையான திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி அமல்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.