அரசு பள்ளி என்றாலே அலட்சியமாக பார்ப்பவர்கள், கோலிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தால், வியப்பில், மூக்கு மீது விரல் வைப்பர்.
மூன்றரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச தரத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளன. இதற்கு காரணம், வெளிநாடு வாழ் இந்தியர்களான பைசல் - ஷபானா தம்பதியரின் நல்ல எண்ணம் தான்.
தங்கள் பிறந்த நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்த இவர்கள், 16 கோடி ரூபாயை, இப்பள்ளியின் வளர்ச்சிக்கு செலவழித்தனர். அத்துடன், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அரசும், சிறப்பு நிதியை இதற்காக செலவிட்டுள்ளது.
இன்று, இந்த அரசு பள்ளி, சர்வதேச பள்ளி போல் தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பெற்றோர் போட்டி போடுகின்றனர்.
1 comment:
Very proud of u.but they are nri.no corruption then great "india"jaihind
Post a Comment