Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 8, 2014

    பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 19 உத்தரவு

    சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    முக்கிய முடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்சமின்றியும் நடந்து கொள்ள வேணடும்.
    உயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். நல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக்கூடாது.
    பொதுமக்களால் மிகவும் எளிதில் அணுகப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது அதிகபட்ச பொறுபபுணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
    நிர்வாகத்தில் வெளிபபடை தன்மையாக இருங்கள். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள், ஏழை – எளியவர்கள் உங்களைத் தேடி வரும்போது அவர்களிடம் பரிவுடன் பேசுங்கள். கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
    உங்கள் கடமையில் இருந்து தவறு செய்யும் வகையில் தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்புகளோ பணம் மற்றும் கோரிக்கைகள் மூலம் உங்களை ஈர்க்க நினைத்தால் அடிபணியாதீர்கள். உங்கள் பதவியை உங்களின் தனிப்பட்ட நலனுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் நலனுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்.
    அரசு அதிகாரிகள் செய்யும் தேர்வு மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒருபோதும் பாரபட்சத்துக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.
    அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மேன்மை படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும்.
    பொதுமக்கள் நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவு தனிப்பட்ட முறையில் உங்களால் மட்டுமே எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும். பொது சொத்துக்களை திறமையாக பயன்படுத்துங்கள்.
    அரசு பணத்தை செலவிடுவதில் திறமையான முடிவு எடுங்கள். சிக்கனமாக, சிறப்பாக செலவுகளை செய்யுங்கள். சட்டம், விதிகள், ஒழுங்கு நடத்தை விதிகள் மற்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள நடத்தை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யாதீர்கள். அத்தகைய செயல்களில் இருந்து விலகியே இருங்கள்.
    இவ்வாறு பிரதமர் மோடியின் 19 உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

    No comments: