ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி. அமைப்பு தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளுக்கு எதிராகவும், அந்த மொழிகளை அழிக்கும் வகையிலும் செயல்படுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரான சரத் யாதவ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை யு.பி.எஸ்.சி. அவமதிப்பு செய்கிறது. யு.பி.எஸ்.சி. தேர்வில் செய்துள்ள மாற்றங்களின் படி எதிர்காலத்தில் இந்த மொழிகளில் படிக்கும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி. அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஆங்கிலம் மட்டும் இருந்தால் போதும்; தேர்வர்களுக்கு ஆங்கில அறிவு தான் அவசியம் தெரிய வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் தான் இந்திய மொழிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment