Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 8, 2014

    அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் வகுப்புகள்

    காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகுப்புகள் நேற்று துவங்கியது.


    கல்வி துறை ஏற்பாடு பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளால் ஏற்படும் உளவியல் பிரச்னைகள், தற்கொலை முயற்சிகள், பாலியல் பிரச்னைகள் போன்றவற்றால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக நடமாடும் வாகனத்தில் சென்று ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ஆலோசனை வகுப்புகள் எடுக்க உளவியல் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டது.

    20 பள்ளிகள்

    காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கியுள்ளது. நேற்று காலை காஞ்சிபுரம் சீனிவாச நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், பிற்பகல் இராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 20 பள்ளிகளில் இந்த உளவியல் வகுப்புகள் நடைபெற உள்ளன.

    No comments: