Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 9, 2014

    தொடக்கப்பள்ளிகளில் குறைகிறது மாணவர்கள் எண்ணிக்கை

    கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    மாவட்ட தொடக்ககல்வி அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் அரசு துவக்கப்பள்ளிகள் 9, அரசு நடுநிலைப்பள்ளி 1, நகராட்சி துவக்கப்பள்ளிகள் 13, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் 15, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் 598, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 149, அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகள் 344, அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் 62, ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளிகள் 14, ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளிகள் 2 என 1,207 பள்ளிகள் உள்ளன.

    துவக்கப்பள்ளிகளில் 46,603 மாணவர்களும், நடுநிலைப்பள்ளியில் 22,354 மாணவர்களும் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. கல்வித்தரம், அடிப்படை வசதிகளும் கிடையாது என்ற காரணங்களினால், ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களும் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    ஒரு சில தனியார் பள்ளிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் தங்களது பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வி சரியாக கிடைக்காது என்ற நினைப்பில் பெற்றோர்கள் அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால் அரசு பள்ளிகள் காட்சிப்பொருளாகவே மாறிவருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது துவக்கப்பள்ளிகள்தான்.

    2007ம் ஆண்டு கணக்குப்படி துவக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் 651 மாணவர்கள் படித்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது 46,603 பேர் மட்டுமே படிக்கின்றனர். இதுபோல் நடுநிலைப்பள்ளிகளில் 25,623 மாணவர்கள் இருந்த நிலையில் தற்போது 22,354 பேர் மட்டுமே படிக்கின்றனர்.

    ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளில் துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 ஆக குறைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பல்வேறு இலவச நலத்திட்டங்களை மாணவர்களுக்கு அளித்தாலும் ஆண்டுதோறும் எண்ணிக்கை குறைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

    அனைவருக்கும் கல்விதிட்டம்(எஸ்எஸ்ஏ) மூலம் மாணவர்களின் சேர்க்கைக்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமித்து, துவக்கம் முதலே தரமான ஆங்கிலவழிக்கல்வி போதித்தால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை தடுக்கலாம்.

    அரசு ஊழியர்கள் தங்களின் பிள்ளைகளில் ஒருவரையாவது இப்பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அதற்கு அரசு வழிகாட்ட வேண்டும். இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகும். இதுபோன்ற நிலைமைதான் நடுநிலைப்பள்ளிக்கும் ஏற்படும்" என்றார்.

    1 comment:

    Anonymous said...

    please close the govt school. here parents admitted their children in the private school. because govt school teachers have no qualification to teach lessons to the children. qualification means not only their academic qualification.
    QUALIFICATION: DEDICATION, SINCIARITY, OBEDIANT, ADJUSTMENT TO STUDENTS , ATTACHMENT TO STUDENTS, COMMON SENSE , GENERAL KNOWLEDGE, SCIENCE, POLITICAL AND HISTORY OF OUR COUNTRY,

    THE MENTIONED CHARECTORS AND QUALITIES ARE NOT WITH OUR TEACHERS. THEY NEVER THINK ABOUT THE FUTURE OF THE STUDENTS AND AS WELL AS THE FUTURE OF OUR MOTHER COUNTRY.

    LOT OF TEACHERS STILL DONT KNOW WHAT IS OUR NATIONAL SONG AND NATIONAL ANTHEM.

    PLEASE LET US ASK OUR GOVT TO CLOSE THE GOVT SCHOOLS WITH LOW STRENGTH STUDENTS AND SAVE THE MONEY OF POOR PEOPLE.

    PARENTS KNOW HOW TO GIVE EDUCATION TO THEIR CHILDREN.

    BUT STILL I REMEMBER THE SERVICES EXTENDED TO ME BY MY GOVT AIDED SCHOOL TEACHER MR S RAJENDRAN, SRIVILLIPUTHUR.
    LEARN HOW TO TEACH FROM HIM.

    I AM HERE BECAUSE OF SHREE S RAJENDRAN SIR.