Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 20, 2014

    சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா மத்திய அரசின் உத்தரவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

    சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி துறையின் செயலாளர், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
    மத்திய பாடத்திட்டத்தின் (சிபிஎஸ்இ) கீழ் இயங்கும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, தேசிய கல்வி ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சமஸ்கிருத மொழி வார விழாவை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், மாவட்டம், மாநில அளவில் இந்த விழாவை கொண்டாட வேண்டுமென்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
    தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு சிறந்த கலாசார பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு. மேலும், சமூக நீதி மற்றும் மொழி இயக்கங்கள் அதிகளவில் உள்ள மாநிலம். எனவே, தமிழகத்தில் சமஸ்கிருத வார விழாவை நடத்துவது என்பது முறையற்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பாரம்பரியமும், கலாசாரமும் கொண்ட பிராந்திய மொழியின் பெயரில்தான் வார விழா கொண்டாடப்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதேபோல் பாரம்பரிய மொழி வார விழா கொண்டாடும் வகையில், மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை தனது உத்தரவை மாற்றி அறிவிக்க வேண்டும். பல்வேறு இன, மொழி கலாசாரங்களை கொண்ட நாட்டில் அப்படி உத்தரவு பிறப்பிப்பதே சரியாக அமையும். இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

    No comments: