சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சுமார் 270 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் இசிஎஸ் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணப்பட்டுவாடாவை சங்ககிரி உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாத சம்பளத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், ரூ.500 வீதம் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை எதற்காக பிடித்தம் செய்யப்பட்டது என்பது குறித்து, இதுவரை ஆசிரியர்களுக்கு எவ்வித தகவலும் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சங்ககிரி வட்டாரக் கிளை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தலைமையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதில், முறைகேடாக பிடிக்கப்பட்ட தொகையை சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment