Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 4, 2014

    ஆசிரியர்கள் சம்பளத்தில் முன்னறிவிப்பின்றி பிடித்தம்

    சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சுமார் 270 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் இசிஎஸ் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணப்பட்டுவாடாவை சங்ககிரி உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    கடந்த ஜூன் மாத சம்பளத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், ரூ.500 வீதம் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை எதற்காக பிடித்தம் செய்யப்பட்டது என்பது குறித்து, இதுவரை ஆசிரியர்களுக்கு எவ்வித தகவலும் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சங்ககிரி வட்டாரக் கிளை தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தலைமையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதில், முறைகேடாக பிடிக்கப்பட்ட தொகையை சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: