Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 6, 2014

    ம.பி. முதல்வருக்கு 9ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தால் சாலை வசதி பெற்ற கிராமம்

    மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டதில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியான மய்மூனா கான் தங்கள் கிராமத்தில் சாலை வசதி மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில முதல்வரான சிவராஜ் சிங் சவுகானுக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். அவரது கடிதத்தின் பலனாக இன்று அந்த கிராமம் சாலை வசதியை பெற்றுள்ளதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
    முதல் இரண்டு கடிதங்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலையில், மனம் தளராமல் மூன்றாவது கடிதத்தையும் மெய்மூனா எழுதினார். அவரது தொடர்ச்சியான கடிதத்தின் பலனாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் வளர்ச்சி திட்டத்தின் நிதியை பயன்படுத்தி அதிகாரிகள் மெய்மூனாவின் கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுத்தனர். மெய்மூனாவின் கடிதத்தில் சாலை வசதி பெற்ற ஒட்டுமொத்த கிராமமும் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் திளைத்தது குறிப்பிடத்தக்கது.

    No comments: